Friday, May 4, 2012

பொன்சேகாவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!– அனோமா


[ 05-05-2012]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என அவரது மனைவியான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நவலோகா தனியார் வைத்தியசாலையிலிருந்து, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளரின் இந்தக் கோரிக்கையின் நம்பகத்தன்மை கிடையாது.
என்றுமில்லாதவாறு, சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து சிறைச்சாலை ஆணையாளருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு சுகமடையும் வரையில் நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின், ஏன் சரத் பொன்சேகாவிற்கு வழங்க முடியாது.
சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரின் சேவையை இழக்கச் செய்வதே இந்த உத்தரவின் உள்நோக்கம் என அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்.

                    அமரர் திருமதி தவரெத்தினம் கணபதிப்பிள்ளை

(உயர் விஸ்வப்பிரம்ம குலதிலகம்)
தோற்றம்:-17-12-1959       மறைவு:-19-04-2011
எங்கள் குடும்பத்தின் பேரொளியாய் விளங்கிய ஏற்றமிக்க எம் அன்புத்தெய்வம்,
எங்களை அன்போடும் பண்போடும் பாசத்துடனும் அரவணைத்து நல்வழி காட்டி எழுச்சியுடன் பார் புகழ வாழவைத்த பாசமிகு குடும்பத்தலைவி கண் மூடி எமைவிட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்று ஆகியும் ஆறாத்துயரில் தவிக்கின்றோம் அம்மா.
எமது குலவிளக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்,ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வும் (08-05-2012)செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லமாகிய மன்னார் திருக்கேதிஸ்வரத்திலும்,74/1 வோல்ஸ்லேன்,அழுத்மாவத்தை ,கொழும்பு-15 ஆகிய  இல்லங்களில் விசேடப்பிரார்த்தனையும்,மதியபோசனமும் நடைபெற இருப்பதால் அத்தருனம் உற்றார்,உறவினர்,கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:-கணவர் (பாலா)
                  சகோதரர்கள், மைத்துனர்,
                       மைத்துனிமார்,
தங்கைமார்,மருமக்கள்,
                   அண்ணண்மார்,பேரப்பிள்ளைகள்.

பி.கணபதிப்பிள்ளை ,திருக்கேதிஸ்வரம்.   

1 comment: